search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign money theft"

    வடபழனியில் காரில் இருந்து ரூ.3¾ லட்சம் வெளிநாட்டு பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சென்னை வந்தார்.

    நேற்று இரவு காரில் சென்ற அவர் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

    அதில் அமெரிக்கா டாலர்கள், யூரோ டாலர்கள் இருந்தன. அதன் மதிப்பு சுமார் 3லட்சத்தி 70ஆயிரம். மேலும் வங்கி பாஸ்புக் இதர ஆவணங்களையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பொன்னுசாமி வடபழனி போலிசில் புகார் அளித்தார். போலீசார் காரை நிறுத்தி சென்ற வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×