search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIR against"

    • தேனி மாவட்டம் சின்னமனூரில் ஆசிரியையை திட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
    • ஆசிரியையை திட்டிய கணவர்

    தேனி:

    சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் சின்னராம கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவரது மனைவி செல்வி (53). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சிலிருந்து இறங்கிய செல்வியை முருகன் சரமாரியாக திட்டினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் சமரசம் செய்தனர். ஆனால் அவர் தொடர்ந்து ஆசிரியையை திட்டினார்.

    இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    ×