search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Pension"

    விவசாயிகளுக்கு மாதம் ரூ.5,000 பென்சன் கேட்டு அன்னாஹசாரே 2-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். #FarmersPension #AnnaHazare

    ராலேகான் சித்தி:

    சமூகசேவகர் அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் இயற்றக் கோரி டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தற்போது லோக்பால் திட்டத்துடன் விவசாயிகளின் பிரச்சினையையும் கையில் எழுந்துள்ளார். விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 பென்சன் வழங்க வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாகும்.

    மேலும் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் சாமிநாதன் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அன்னாஹசாரே கூறி வருகிறார்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திஜெயந்தி தினமான வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் மாலேகான் சித்தியில் தொடர் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

    ×