என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "FAKE VISA"
- திண்டுக்கல் செல்லமாந்தடி பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 33). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்
- திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் ரோடு பகுதியை சேர்ந்த சானவாஸ் (39) என்பவர் அரபு நாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு ரூ.85 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திருச்சி,
திண்டுக்கல் செல்லமாந்தடி பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 33). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கன்சல்டன்சியை தொடர்பு கொண்டார்.
அப்போது அங்கிருந்த திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் ரோடு பகுதியை சேர்ந்த சானவாஸ் (39) என்பவர் அரபு நாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு ரூ.85 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இளையராஜா உறவினர்களிடம் பணத்தைப் புரட்டி அவர் கேட்ட ரூ.85 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
அதன் பின்னர் சானவாஸ் அவருக்கு போலி விசா கொடுத்து பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளையராஜா திருச்சி தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சானவாசை தேடி வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட சானவாஸ் மீது ஏற்கனவே தில்லை நகர் காவல் நிலையத்தில் இரண்டு மோசடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்