search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye irritating"

    பழனி அருகே கோவில் விழாவிற்கு சென்ற 100-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி-தாராபுரம் ரோட்டில் ஜவகர்நகர் உள்ளது. இங்குள்ள மதுரை வீரன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று இரவு நடந்த கலை நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இன்று காலையில் அவர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்டோருக்கு எரிச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

    அவர்கள் அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தனர். கோவில் விழாவில் அதிக வெளிச்சத்துடன் கூடிய விளக்குகளை பயன்படுத்தியதால் அவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருந்து ஊற்றப்பட்டு ஆஸ்பத்திரியிலேயே தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்டமான நிலை உருவானது.

    இது குறித்து போலீசார் விழா குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×