என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » erode news driver commits suicide by fire
நீங்கள் தேடியது "Erode News Driver commits suicide by fire"
பெருந்துறை அருகே டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள கவுண்டம்பா–ளையம், ஊனாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 41). பால்வண்டி டிரைவரான இவர் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன், மகளுடன் குடியிருந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கீழே விழுந்ததில் வலது கால் முட்டியில் அடிபட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டாம் என மனைவியுடன் தகராறு செய்து விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சங்கீதா பக்கத்து வீட்டில் உள்ள தனது தோழியை கூட்டிவந்து வீட்டினுள் பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
சங்கீதா உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X