search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ennore Harbour"

    சென்னைக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்த எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு துபாயில் இருந்து ஒரு கப்பல் வந்தது.

    அதில் வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த கப்பலில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் 3 கண்டெய்னர்களில் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 30.24 லட்சம் சிகரெட்டுகள் அட்டை பெட்டிக்குள் அடைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4.23 கோடி.

    இந்த சிகரெட்டுகள் அனைத்தும் இந்தோனேஷியா நாட்டு தயாரிப்பு வகையாகும். இதனை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×