என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electric Tain"
- பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகா் மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
- திருத்தணிக்கும், திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு - வியாசா்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் மறு நாள் காலை 6.30 மணி வரை 7 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அந்த 7 மணி நேரத்துக்கு பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகா் மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அதே போல் இன்று இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்தும், இரவு 9.45 மணிக்கு திருத்தணியில் இருந்தும் சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ஆவடியுடன் நிறுத்தப்படும். மேலும் நாளை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு திருத்தணிக்கும், அதிகாலை 5 மணிக்கு திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்