search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Mourning"

    தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங் மறைவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #BhishmaNarayanSingh
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங் தனது 85-வது வயதில் 1.8.2018 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    பீஷ்ம நாராயண்சிங் ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தவர். இவர் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சிக் காலத்திலும், அசாம் மற்றும் மேகாலய மாநிலத்திலும், ஆளுநராக பதவி வகித்தவர். இதுமட்டுமின்றி மத்திய அமைச்சரவையிலும், பீகார் மாநில அமைச்சராகவும், பதவி வகித்த சிறப்புக்குரியவர்.

    பீஷ்ம நாராயண்சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். #BhishmaNarayanSingh

    ×