search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DUPLICATE DOCUMENT"

    • போலி ஆவணம் மூலம் பத்திரம் பதிவு செய்ய முயன்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சார் பதிவாளர் கோகிலா முன்னிலையில் ஆஜராகினர்

    திருச்சி :

    திருச்சி ஆலம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மகன் கருப்பையா (வயது 35). இவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மதியம் கருப்பையா மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் நகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி (59) மற்றும் ராம்குமார் (41), விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ஆசிர்வாதம் (51) ஆகியோர்

    திருச்சி மாவட்டம் மேக்குடி கிராமத்தில் உள்ள 4,800 சதுர அடி கொண்ட காலிமனைகளை ஆரோக்கியமேரி பெயரில் உரிமை ஆவணம் வழங்குவதற்காக கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சார் பதிவாளர் கோகிலா முன்னிலையில் ஆஜராகினர்.

    தொடர்ந்து பத்திரப் பதிவுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது ஆரோக்கிய மேரியின் ஆதார் அட்டை போலியானது என தெரிய வந்ததைத் தொடர்ந்து மேற்கண்ட நான்கு நபர்கள் மீது கே.சாத்தனூர் சார் சார்பதிவாளர் கோகிலா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த கே.கே.நகர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆவணம் தயாரித்ததாக வழக்கறிஞர் ஒருவர் மற்றும் இதனை தாக்கல் செய்த இருவரைரிடமும் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர். இதனால் கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×