search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindugal government bus"

    திண்டுக்கல்லில் இருந்து கோவிலூருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    எரியோடு:

    திண்டுக்கல்லில் இருந்து எரியோடு வழியாக கோவிலூருக்கு தினசரி காலை மற்றும் மாலையில்அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. புங்கம்பாடி கிராமத்துக்குள் வந்து பின்னர் கோவிலூர் செல்லும் பாதை சேதமடைந்து இருந்ததால் அந்த பஸ் கடந்த 1 வருடத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    இந்த பஸ்சில் புங்கம்பாடி, தங்கம்மாபட்டி, ஆர்.கே.புதூர், தொப்பாநாயக்கனூர், ஆவள கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்று வந்தனர்.

    ஆனால் தற்போது பஸ் இயக்கப்படாததால் 2 கி.மீ தூரம் நடந்து புங்கம்பாடி பிரிவில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மாலை நேரங்களில் நீண்ட தூரம் நடந்து வரும் மாணவர்கள் மயக்கமடைந்து விழும் நிலையும் ஏற்படுகிறது.

    எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×