search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "detonators seized"

    இலங்கைக்கு கடத்த முயன்ற 5,600 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ஏர்வாடி, பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசாரும், கடலோர காவல் படையினரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்த நிலையில் ராமேசுவரம் அருகில் உள்ள சேராங்கோட்டைகடற்கரை பகுதியில் நேற்றிரவு கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய பயன்படுத்தும் 5,600 டெட்டனேட்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்றதாக 6 பேரும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை ராமேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    பிடிபட்ட 6 பேரும் ராமேசுவரம் மண்டபத்தைச் சேர்ந்த முகமது முஸ்ஸம் பில், பச்சம்மாள், சுப்பிரமணியன், ரவி, நம்பு, செல்வம் என தெரியவந்தது.

    எதற்காக ஜெலட்டின் குச்சிகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    ×