search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle rally"

    திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் அமைச்சர் உதயகுமாருடன் சைக்கிளை ஓட்டி வந்தனர். இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணா சிலை அருகே அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இந்த பேரணியால் எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பல திட்டங்களை ஜெயலலிதாவைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

    17 மாதங்களில் 32 ஆயிரம் போராட்டங்களை கண்டு தளர்ந்து விடாமல் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனைகளாக மாற்றியுள்ளார் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர் இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரசார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ராதா கிருஷ்ணன் எம்.பி, சந்திரபிரபாமுத்தையா எம்.எல்.ஏ., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வ சுப்பிரமணியராஜா, மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை சிறப்பாக நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரச்சார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 13-ந்தேதி சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நடக்கிறது. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

    தொடர்ந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யும் சைக்கிள் பேரணி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளது. பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி புதுப்பட்டிகருப்பசாமி, சாத்தூர்சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்குஎதிர் கோட்டை மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர்மயில் சாமி, ராஜபாளையம் மேற்கு குருசாமி, விருதுநகர் மூக்கையா, நகர செயலாளர்கள் சிவகாசி அசன்பதூரூதீன், திருத்தங்கல் பொன்சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பால சுப்பிரமணியன், ராஜபாளையம் பாஸ்கரன், சாத்தூர் வாசன், விருதுநகர் நயினார் முகமது, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சேது ராமா னுஜம், விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூக்கையா, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், பேரூராட்சி செயலாளர் அய்யனார், உள்பட அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி அம்மா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

    சாத்தூர்:

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறும் வகையிலும் நாடாளு மன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையிலும் விருதுநகர் மாவட்டம் மற்றும் நான்கு மாவட்டங்களில் 21 சட்டமன்ற தொகுதியில் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

    வருகிற 13-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர். 14-ந் தேதி சாத்தூரில் தொடங்கும் சைக்கிள் பேரணி சாத்தூரில் உள்ள பல்வேறு குக்கிராமங்களில் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெறுகிறது.

    அதனையொட்டி ராஜபாளையம் வழியாக சைக்கிள் பேரணியாக சென்று அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஸ்ரீவில் லிபுத்தூரில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    14-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்டு பல்வேறு பட்டாசு தொழி லாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துரைத்து சிவகாசி தொகுதிக்கு வந்தடைகிறது. அங்கு அரசின் சாதனைகளை எடுத்துரைக்கின்றனர்.

    வருகிற 15- தேதி சிவகாசியில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சைக்கிள் பேரணியாக சென்று விருது நகரை வந்தடைகின்றனர்.

    16-ந் தேதி அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் சாதனைகளை எடுத்துரைத்து காரியாப்பட்டியில் சைக்கிள் பேரணியை நிறைவு செய்கின்றனர்.

    சாத்தூரில் வருகிற 13-ந் தேதி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை விருதுநகர் மாவட்ட செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டை மணிகண்டன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், வக்கீல் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×