search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRACKERS EXPLODED"

    • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நாட்டு வெடி வெடிக்கப்பட்டது
    • வெடித்து சிதறி கூட்டத்துக்குள் புகுந்ததில் குமரப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் இக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கிராம மக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று சாமி வீதி உலா புறப்பாடுக்காக ஆயத்தமானது. இதனை தெரிவிக்கும் வகையில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த வெடி திடீரென எதிர்பாராத விதமாக வெடிக்க தொடங்கியது.

    இந்த வெடித்து சிதறி கூட்டத்துக்குள் புகுந்ததில் குமரப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மணப்பாறையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் கள்ளிப்பட்டி சேர்ந்த 16 வயது சிறுமி, 13 வயது சிறுமி, சத்யா (27), பாஸ்கர் (57), குமரப்பட்டியை சேர்ந்த பானுமதி (36) உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு வெடிக்க முன் அனுமதி பெறப்பட்டதா, விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தது நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ×