search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam waterfalls"

    • குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் அளவில் வெயில் வாட்டிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது தொடர் சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்றைய காலை நிலவரப்படி ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    பழைய குற்றால அருவிக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க எவ்வித தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடுமையான வெயிலின் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இந்தத் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×