என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CHILAMBAM COMPETITION"
- மாநில அளவிலான சிலம்பப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடைபெற்றது.
- போட்டியில் சென்னை, திருச்சி, கரூர் அரியலூர் உள்பட 17-க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 1,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
திருச்சி:
தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பாக மாநில அளவிலான சிலம்பப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடைபெற்றது.
போட்டியில் சென்னை, திருச்சி, கரூர் அரியலூர் உள்பட 17-க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 1,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டைக் கம்பு, கம்புச் சண்டை போன்ற ஆகிய பிரிவுகளில் இரண்டு வயது பிரிவினருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் வீர சாய் சிலம்ப கழக வீரர், வீராங்கனைகள் 8 பேர் ஜெ.சீனிவாசன் தலைமையில் ஒற்றைக்கம்பு, மற்றும் கம்பு சண்டை போன்ற 2 பிரிவுகளிலும் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் இவர்கள் 5 பேர் முதல் இடத்தையும், 3 பேர் இரண்டாம் இடத்தையும், 5 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு விளையாட்டு கழகத்தின் தலைவர் வேணுகோபால் பரிசு வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்