search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CHILAMBAM COMPETITION"

    • மாநில அளவிலான சிலம்பப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடைபெற்றது.
    • போட்டியில் சென்னை, திருச்சி, கரூர் அரியலூர் உள்பட 17-க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 1,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    திருச்சி:

    தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பாக மாநில அளவிலான சிலம்பப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடைபெற்றது.

    போட்டியில் சென்னை, திருச்சி, கரூர் அரியலூர் உள்பட 17-க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 1,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டைக் கம்பு, கம்புச் சண்டை போன்ற ஆகிய பிரிவுகளில் இரண்டு வயது பிரிவினருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் வீர சாய் சிலம்ப கழக வீரர், வீராங்கனைகள் 8 பேர் ஜெ.சீனிவாசன் தலைமையில் ஒற்றைக்கம்பு, மற்றும் கம்பு சண்டை போன்ற 2 பிரிவுகளிலும் பங்கேற்றனர்.

    இறுதிப் போட்டியில் இவர்கள் 5 பேர் முதல் இடத்தையும், 3 பேர் இரண்டாம் இடத்தையும், 5 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு விளையாட்டு கழகத்தின் தலைவர் வேணுகோபால் பரிசு வழங்கினார்.

    ×