search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cattle smugglers"

    லக்னோ சென்றுகொண்டிருந்த லாரியில் இருந்து 21 மாடுகள் மீட்கப்பட்டு கன்ஹா உப்வான் என்கிற விலங்குகள் நல அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    பரேலி:

    பஞ்சாப்பில் இருந்து பீகாருக்கு, உத்தர பிரதேச மாநிலம் வழியாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிபி கேங் காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி கோவிந்த் சிங் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது, உ.பி., ராம்பூர் மாவட்டம் வழியே லக்னோ நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றை பர்தௌலி கிராமம் அருகே வழிமறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதில் லாரியில் சந்தேகத்திற்கு இடமாக 21 பசு மாடுகள் இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த மாடுகள் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், லாரியில் இருந்து 21 மாடுகள் மீட்கப்பட்டு கன்ஹா உப்வான் என்கிற விலங்குகள் நல அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்... தனியார் இயக்கும் ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரெயில்: 190 ரெயில்கள் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் தகவல்
    ×