search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balasubramanya Swamy Temple"

    • பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது.
    • முன்னதாக மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தி யப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. முன்னதாக மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ராணி பால குமாரி நாச்சியார், ராஜா சேவுகப் பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத் தம்பியார், ராணி பிரசன்னா, ராணி ஸ்ரீ தங்கதேவசேனா நாச்சியார் மற்றும் குடும்பத்தினர், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், சிவகிரி தேவர் மகா சபை தலைவர் குருசாமிப்பாண்டியன், செயலாளர் சுந்தரராஜன், துணை செயலாளர் கற்பகசுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன், திருஞானம், ஆசிரியர் மருதுபாண்டியன், அனைத்து சமுதாய பொறுப் பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1-ம் திருநாளான இன்று கீழத்தெரு தேவர் மண்டபம் சார்பில் விழா நடைபெறு கிறது.

    ×