search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempt to suicide"

    • திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வந்தவர் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • இந்த சம்பவத்தால் எஸ்.பி. அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது55). சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதனால் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தது. இது குறித்து நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்ைல என தெரிகிறது. மேலும் முன்னாள் எஸ்.பி. சீனிவாசனிடமும் புகார் மனு அளித்திருந்தார். ஆனால் இதுவரை எந்தவித விசாரணையும் இல்லாததால் சகோதரர்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. நேற்று அவரது கடைக்குள் புகுந்த சகோதரர்கள் அந்தோணியை தாக்கி கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் தூக்கி சென்று விட்டனர். இதனால் இன்று திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வந்த அந்தோணி திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்ததும் அங்கிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய பிரச்சினைகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. யிடம் மனு அளித்து செல்லுமாறு அறிவுரை வழங்கினர்.

    அதன்பின் தனது கோரிக்கை மனுைவ அவர் அளித்து சென்றார். இந்த சம்பவத்தால் எஸ்.பி. அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×