search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adhaar number"

    • தமிழகத்தில் இதுவரை 1.50 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
    • மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வசதியாக நடமாடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 1.50 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இன்னும் 75 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.

    மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வசதியாக நடமாடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறியது சென்னை உயர் நீதிமன்றம்.

    தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இந்தச் சூழலில் இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    ×