search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Safey"

    ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
    வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

    குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.

    உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

    கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.

    மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.  

    வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.
    வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.

    1. குடியிருப்புகளில் செய்யப்படும் மின் வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்வதே நல்லது.

    2. பேஸ் கம்பியில் சுவிட்ச் கண்ட்ரோல் வைக்க வேண்டும். மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரை மற்றும் நட்சத்திர குறியிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    3. மின் பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் அதற்குரிய சுவிட்சை ‘ஆப்’ செய்யவேண்டும்.

    4. பிரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றிற்கு ‘எர்த்’ இணைப்புடன் கூடிய மூன்று பின் கொண்ட பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    5. குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை அமைக்கக் கூடாது.

    6. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதான வயர்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை கால தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

    7. பிளக் பாயிண்ட்டுகளில் குளவிக்கூடு கட்டாமல் இருக்க துளை அடைப்பான் கொண்டவற்றை பொருத்த வேண்டும்.



    8. மின் மோட்டர், அயர்ன் பாக்ஸ், வாளியில் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை மின் இணைப்பை துண்டித்த பின்னரே கையால் தொட வேண்டும்.

    9. சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளை ‘சுவிட்ச்’ போடச்சொல்லி விளையாட்டு காட்டுவது கூடாது.

    10. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் வயரிங் அமைப்புகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    11. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.

    12. மின் இணைப்பிற்கு ‘எக்ஸ்டென்ஷன்’ கார்டுகள் உபயோகிக்கும்போது, அவற்றில் பழுதுகள் இருக்கக் கூடாது.

    13. வீடுகளில் ஈ.எல்.சி.பி. (E.L.C.B.) அமைப்பை மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.

    14. வீடுகளில் கச்சிதமாக ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் தொடாத வகையில் பராமரிப்பது நல்லது.

    15. இடி, மின்னல் காலங்களில் டி.வி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

    16. புதிய வீடு கட்டுபவர்கள், சுவருக்குத் தண்ணீர் விடும்போது, பக்கத்தில் உள்ள மின் கம்பிகளில் படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
    கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானது. எப்படி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
    கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானது. அதன் அடிப்படையில், வல்லுனர்கள் அளிக்கும் சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம். பொதுவாக, வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் மொத்த மின்சார பயன்பாட்டில் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் குளிர்சாதன பெட்டிக்கும், 20 சதவிகிதம் ஏ.சி பயன்பாட்டிலும், 8 சதவிகிதம் மின் விளக்குகளுக்கும், 32 சதவிகிதம் கெய்சருக்கும், மற்ற சாதனங்களுக்கு 28 சதவிகிதம் என்ற அளவிலும் செலவாகிறது என்று அறியப்பட்டுள்ளது.

    குளிர் சாதன பெட்டி

    சிக்கன நடவடிக்கையின் அடிப்படையில் ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறை சரியாக மூடப்படிருப்பது அவசியம். அதில் இடைவெளி இருந்தால் மின்சார பயன்பாடு அதிகமாகும். அடிக்கடி போடப்படும் சுவிட்சுகளை பயன்படுத்தும் முறையிலும் கூட மின் ஆற்றல் வீணாகும் வாய்ப்பு உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வீடுகளில் மின்சார பயன்பாட்டில் 20 சதவிகித அளவை ஏ.சி எடுத்துக்கொள்ளும் நிலையில் அதனை கச்சிதமாக பயன்படுத்த வேண்டும். அறையில் வெப்ப நிலையை அதிகரிக்கும் சாதனங்களை ஏ.சி அறையில் அவசியமில்லாமல் வைப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். மேலும், ஏ.சி-யின் ‘அவுட்டோர் யூனிட்’ மரத்தடி போன்ற நிழலான இடங்களில் வைப்பதன் மூலம் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தை சேமிக்க இயலும்.



    மின்சார விளக்குகள்

    அறைகளில் உள்ள மின் விளக்குகள் கிட்டத்தட்ட 8 சதவிகித மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. அதனால், மின் விளக்குகளை தேவைப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. சி.எப்.எல் விளக்குகள் எப்போதும் மின் சிக்கனத்துக்கு ஏற்றவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பிரிட்ஜ் பயன்பாடு

    வீடுகளின் மின்சார பயன்பாட்டில் சுமார் 12 சதவிகிதத்தை பிரிட்ஜ் எடுத்துக்கொள்கிறது. அதன் அடிப்படையில் அதிகப்படியான குளிர்ச்சி கொண்ட நிலையில் பிரீசர்களை வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல. மேலும், அடிக்கடி பிரிட்ஜை திறப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக, பிரிட்ஜ் மற்றும் சுவருக்கு இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். அதனால் பிரிட்ஜ் உபயோகத்துக்கான மின்சார தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவு பொருட்களை 36 முதல் 40 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையிலும், பிரீசரை 5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையிலும் வைத்துப் பராமரிப்பதும் நல்லது.
    ×