search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle traffic"

    • வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வியாபாரம் நடைபெறாததால் ஒரு சில கடைகள் மூடியே கிடக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.என் குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இப்பணிக்காக சாலை ஓரம் இருந்த ஆயிரக்கணக்கான கடைகள் அகற்றப்பட்டன.

    இந்நிலையில் அரியூர், கண்டமங்கலம், திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் சர்வீஸ் சாலைகள் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது.

    இதனால் சாலைகளில் இருபுறமும் உள்ள கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலைகளில் 5 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் திருவாண்டார் கோவில், திருபுவனை மதகடிப்பட்டு பகுதியில் பாலங்கள் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்தில் மட்டுமே பஸ்கள் நின்று செல்வதால் அங்கு சென்று பொதுமக்கள் பயணித்து வருகிறார்கள்.

    இதனால் இடையில் உள்ள ஓட்டல்கள், துணிக்கடைகள், மெடிக்கல், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திர கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மதுபான கடைகள் என பல்வேறு வியாபார கடைகள் பாதிக்கப்பட்டு, முற்றிலும் வியாபாரத்தை இழந்துள்ளனர்.

    கடைகளுக்கு வாடகை கூட தர முடியாத நிலையில் வியாபாரிகள் தற்போது உள்ளனர். வியாபாரம் நடைபெறாததால் ஒரு சில கடைகள் மூடியே கிடக்கின்றன.

    அதோடு சாலை போடும் பணிகளால் தூசி, மண் உள்ளிட்ட குப்பைகள் கடைகளில் உள்ள பொருட்களில் படிவதால் தினந்தோறும் பொருட்களை சுத்தம் செய்வதற்கே நேரம் சரியாக உள்ளது என்று, வியாபாரிகள் புலம்பி வருகிறார்கள்.

    சென்னையில் பெய்து வரும் மழையால் மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடையால் காமாட்சி மருத்துவமனை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. 

    குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னை நகரின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து வேறு சாலை வழியாக மாற்றம் செய்யப்படுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடையால் காமாட்சி மருத்துவமனை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    * ரங்கராஜபுரம், மேட்லி சுரங்கப்பதைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கு தடையால் 2வது அவென்யூ வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கு தடையால் கேசவர்திணி சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கு தடையால் ஹபியுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மேலும், தாம்பரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையிலும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 
    ×