என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TET Exam"
- 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை.
- டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம்.
தாராபுரம்:
அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 20-ந் தேதிக்கு மேல் தான் சம்பளம் வழங்கப்படுவதாக பலரும் புலம்புகின்றனர்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும் என 2009ல் மத்திய அரசு அறிவித்தது.ஆனால், இச்சட்டம் தமிழகத்தில் 2011ல் தான் அமலுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில், அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரினர்.சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் டெட் தேர்வு எழுத தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
அரசுப்பள்ளிகளில் பணிபுரிவோருக்கும் விலக்கு அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோர் மட்டும் டெட் தேர்வில் விலக்கு பெற முடியாமல் தவிக்கின்றனர்.இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை. மகப்பேறு விடுப்பு எடுக்கக்கூட கல்வித்துறை பரிந்துரைக்கவில்லை.
இந்நிலையில் இவர்களுக்கான ஊதியமும் மாதந்தோறும், 20ந்தேதிக்கு மேல் வழங்குவதாக பலரும் புலம்புகின்றனர்.டெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம். சம்பளமும் 20ந் தேதிக்கு மேல்தான் வருகிறது.
உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவதால், நிர்வாகத்திடம் இதைப்பற்றி பேச முடியாது. அரசும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது. தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுத்தேர்வில் சென்டம் ரிசல்ட் தருகிறோம்.இதற்கு மேல் தகுதியை எப்படி நிரூபிப்பது என தெரியவில்லை.சொற்ப ஆசிரியர்களே, டெட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதால் எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
விண்ணப்பத்திற்கான காலம் முடிவடைந்த பின்னர், ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது.
ஜூன் 8-ந்தேதி பி.எட் இறுதி ஆண்டு தேர்வின் ஒரு தாளுக்கான பரீட்சையும் நடைபெற இருக்கிறது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், பி.எட். இறுதி ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி ஜூன் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவ-மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.
8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்தது. இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது. பி.எட் இறுதி ஆண்டு தேர்வும் அதே நாளில் வருவதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வு தேதியை மாற்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்