search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெட் தேர்வில் இருந்து விலக்கு - ஆசிரியர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    டெட் தேர்வில் இருந்து விலக்கு - ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    • 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை.
    • டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம்.

    தாராபுரம்:

    அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 20-ந் தேதிக்கு மேல் தான் சம்பளம் வழங்கப்படுவதாக பலரும் புலம்புகின்றனர்.

    கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும் என 2009ல் மத்திய அரசு அறிவித்தது.ஆனால், இச்சட்டம் தமிழகத்தில் 2011ல் தான் அமலுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில், அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரினர்.சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் டெட் தேர்வு எழுத தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    அரசுப்பள்ளிகளில் பணிபுரிவோருக்கும் விலக்கு அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோர் மட்டும் டெட் தேர்வில் விலக்கு பெற முடியாமல் தவிக்கின்றனர்.இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை. மகப்பேறு விடுப்பு எடுக்கக்கூட கல்வித்துறை பரிந்துரைக்கவில்லை.

    இந்நிலையில் இவர்களுக்கான ஊதியமும் மாதந்தோறும், 20ந்தேதிக்கு மேல் வழங்குவதாக பலரும் புலம்புகின்றனர்.டெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம். சம்பளமும் 20ந் தேதிக்கு மேல்தான் வருகிறது.

    உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவதால், நிர்வாகத்திடம் இதைப்பற்றி பேச முடியாது. அரசும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது. தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுத்தேர்வில் சென்டம் ரிசல்ட் தருகிறோம்.இதற்கு மேல் தகுதியை எப்படி நிரூபிப்பது என தெரியவில்லை.சொற்ப ஆசிரியர்களே, டெட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதால் எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×