search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthamil"

    • கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுத்து இலவச மின் இணைப்பும் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.
    • முன்னாள் கலெக்டர் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம், அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் தஞ்சாவூா் கலைஞா் நகரைச் சோ்ந்த விளிம்பு நிலை மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா் மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்காகச் செந்தமிழ் நகா் திட்டத்தை முன்னாள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கொண்டு வந்து வீடுகள் கட்டிக் கொடுத்தாா். இந்த திட்டத்தில் இடம் தேர்வு செய்து இலவசமாக வீட்டு மனைப்பட்டா, சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை தயார் செய்து கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுத்து இலவச மின் இணைப்பும் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல, கலைஞா் நகரைச் சோ்ந்த வீடு இல்லாத 48 குடும்பங்களைச் சோ்ந்த எங்களுக்கு திருக்கானூா்பட்டியில் தயாா் நிலையில் உள்ள செந்தமிழ்நகா் திட்டம் மூலம் இலவச மனைப் பட்டா வழங்கி இலவசமாக வீடுகள் கட்டித் தர வேண்டும். முன்னாள் கலெக்டர் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×