என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Redhills robbery
நீங்கள் தேடியது "Redhills robbery"
செங்குன்றம் அருகே ஒரே நேரத்தில் 2 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த காந்திநகரில் அரசு மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். மையங்கள் அடுத்தடுத்து உள்ளன.
நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று ஏ.டி.எம். மையத்தினுள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இரும்பு கம்பியை கொண்டு முயன்றனர்.
முதலில் மையத்தில் புகுந்து பணத்தை எடுக்க முயற்சி செய்து அது பலன் அளிக்கவில்லை.
அதனையடுத்து மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கைவரிசை காட்டினர். எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் திடீரென சத்தம் போட்டது. திடீரென அபாய சத்தம் கேட்டதால் அந்த பகுதியில் இருந்த சிலர் என்னமோ... ஏதோ என்று தெரியாமல் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் வருவதை அறிந்ததும் கொள்ளை கும்பல் தப்பி ஓடியது. ஒரே நேரத்தில் 2 ஏ.டி.எம்.களிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏ.டி.எம்.களில் உள்ள கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அலாரம் ஒலித்ததால் பல லட்சம் ரூபாய் வங்கி பணம் தப்பியுள்ளது.
செங்குன்றத்தை அடுத்த காந்திநகரில் அரசு மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். மையங்கள் அடுத்தடுத்து உள்ளன.
நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று ஏ.டி.எம். மையத்தினுள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இரும்பு கம்பியை கொண்டு முயன்றனர்.
முதலில் மையத்தில் புகுந்து பணத்தை எடுக்க முயற்சி செய்து அது பலன் அளிக்கவில்லை.
அதனையடுத்து மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கைவரிசை காட்டினர். எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் திடீரென சத்தம் போட்டது. திடீரென அபாய சத்தம் கேட்டதால் அந்த பகுதியில் இருந்த சிலர் என்னமோ... ஏதோ என்று தெரியாமல் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் வருவதை அறிந்ததும் கொள்ளை கும்பல் தப்பி ஓடியது. ஒரே நேரத்தில் 2 ஏ.டி.எம்.களிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏ.டி.எம்.களில் உள்ள கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அலாரம் ஒலித்ததால் பல லட்சம் ரூபாய் வங்கி பணம் தப்பியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X