search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Govt Hospital"

    • திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம்.

    சென்னை:

    நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைதொடர்பு இணைப்புகள் மூலம் இத்தகைய மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

    இது சுகாதார சேவைகளை பயனாளிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் உன்னதமான முறையாகும்.

    கொரோனா பேரிடர் காலத்தில், தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்த பரிசாக அமைகிறது.

    இதை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொலை மருத்துவம் எனப்படும் இணைய வழி மருத்துவ ஆலோசனை சேவை மக்களுக்காக சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம் என்று டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

    • கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.
    • கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தற்போதும் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த அளவிலான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.

    கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரிய அளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் தீ விபத்து ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ×