என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "prostitution case"
- ஹவுசிங் யூனிட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.
- விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.இதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது சேலம் கெங்கவள்ளி தாலுகா, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் சத்யா ( எ) சேர்மக்கனி (வயது 31), ஊத்துக்குளி ஹவுஸிங் யூனிட், டாலர் சிட்டி 2-வது வீதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் குமார் (எ) செந்தில்குமார் ( 41), நாகப்பட்டினம் மாவட்டம், பிரிஞ்சிமூளை, காடைதந்தி, லெனின் தெருவை சேர்ந்த சுந்தரையா மகன் அகிலன் ( 23) மற்றும் நாகேந்திரன்கோபு மகன் விஸ்வந்த் ( 23) ஆகியோர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக தெரிய வந்தது.
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் 5 புரோக்கர்களாக செயல்பட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாண்டி ( 40), நாச்சிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் ( 45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்