search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி அருகே விபச்சார வழக்கில் மேலும் 2 பேர் கைது
    X

    விபச்சார வழக்கில் கைதானவர்கள்.

    ஊத்துக்குளி அருகே விபச்சார வழக்கில் மேலும் 2 பேர் கைது

    • ஹவுசிங் யூனிட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.
    • விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.இதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது சேலம் கெங்கவள்ளி தாலுகா, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் சத்யா ( எ) சேர்மக்கனி (வயது 31), ஊத்துக்குளி ஹவுஸிங் யூனிட், டாலர் சிட்டி 2-வது வீதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் குமார் (எ) செந்தில்குமார் ( 41), நாகப்பட்டினம் மாவட்டம், பிரிஞ்சிமூளை, காடைதந்தி, லெனின் தெருவை சேர்ந்த சுந்தரையா மகன் அகிலன் ( 23) மற்றும் நாகேந்திரன்கோபு மகன் விஸ்வந்த் ( 23) ஆகியோர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக தெரிய வந்தது.

    விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் 5 புரோக்கர்களாக செயல்பட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாண்டி ( 40), நாச்சிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் ( 45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×