search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Industries"

    • இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தல்
    • இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

     புதுச்சேரி:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 15-வது மாநில மாநாடு திருவள்ளுவர் சாலையில் உள்ள கருணாஜோதி அரங்கத்தில் நடந்தது. மாநில துணை செயலாளர் எழிலன் தீர்மானம் வாசித்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் மாநட்டு கொடி ஏற்றினார். மாநில தலைவர் பெருமாள் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் திருமலை தொடக்க உரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, செயற்குழு உறுப்பினர் ஹரீஷ்பாலா முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் சிவா, ரவி, பெருமாள், தசரா, அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிற்சாலைகளில் 60 சதவிகித வேலை வாய்ப்புகளை புதுவை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனை பணியிடங்களில் புதுவை மாநில இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #PrivateIndustries
    புதுடெல்லி:

    அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 33 புகார்களும், டெல்லியில் இருந்து 23 புகார்களும் பதிவாகி இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    அதேபோல் அரசு துறைகளில் இருந்தும் புகார்கள் வந்து இருக்கின்றன. நிதித்துறையில் இருந்து 21 புகார்களும், தகவல் தொடர்பு துறையில் இருந்து 16 புகார்களும் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    ×