search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poondi matha"

    தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் பூண்டியில் மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புனித கன்னி மரியாள் பிறப்பு நாளான நேற்றுமுன்தினம் மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வண்ண விளக்குகளாலும், மல்லிகை பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புனித கன்னி மரியாள் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயர், தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கன்னி மரியாளின் காலடியில் மலர் மாலைகள், சேலைகளை வைத்து வழிபட்டனர்.

    தேர்பவனி நிறைவடைந்தவுடன் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. பூண்டி மாதா பேராலய திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

    பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
    தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, பேராலய புதுமை மாதாவின் பிறப்பு திருவிழாவை தொடங்கி வைப்பார்.

    இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் சுற்றுவட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து நவ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலையில் சிறிய சப்பரத்தில் மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ நாட்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற உள்ளன. கன்னி மரியாள் பிறந்த நாளான அடுத்த மாதம் 8-ந் தேதி அன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 
    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதந்தோறும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் இந்த வழிபாடு நடக்கிறது. இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) புதுமை இரவு வழிபாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    புளியங்குடி உலக மீட்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். 
    தமிழகத்தில் உள்ள பிஷப்களின் ஆண்டு பேரவை கூட்டம் பூண்டி மாதாபேராலயத்தில் தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    தமிழகத்தில் உள்ள பிஷப்களின் ஆண்டு பேரவை கூட்டம் பூண்டி மாதாபேராலயத்தில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள 23 மறை மாவட்ட பிஷப்கள் கலந்து கொண்டனர். தமிழக பிஷப் களின் தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அனைத்து பிஷப்களும் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் ஆன்மிக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் செய்திருந்தனர். 
    ×