என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pondicherry ganja sales"
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வில்லியனூர் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் கஞ்சா கும்பலை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
இதற்காக வாலிபர் ஒருவரை மாணவர் போல் அனுப்பி கஞ்சா வாங்க வைக்க முயற்சித்தனர். அப்போது அரும்பார்த்தபுரம் நடராஜன் நகரில் உள்ள தென்னந் தோப்பில் கஞ்சா விற்பது தெரிய வந்தது.
அந்த வாலிபர் அங்கு சென்று கஞ்சா வாங்கினார். அப்போது வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் திடீரென சென்று சுற்றி வளைத்தனர்.
அங்கு 2 பேர் கஞ்சா விற்று கொண்டு இருந்தனர். அவர்களை கைது செய்தார்கள். அவர்கள் இருவரும் நடராஜன் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 22), பாரதிகுமார் (24) என்பது தெரிய வந்தது. இதில், பாரதி குமார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் ஆவார்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை வரவழைத்து கஞ்சா விற்பனை செய்ததுடன் நேரடியாக சென்றும் கஞ்சா கொடுத்துள்ளனர்.
இவற்றை சென்னையில் இருந்து வாங்கி வந்து விற்றதாக கூறினார்கள். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்