search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Memorial Day"

    • தமிழக டிஜிபி மலர் வளையம் வைத்து மரியாதை
    • மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மலர் வளையம் வைத்து மரியாதை

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது துணிச்சலாக எதிரிகளை எதிர்கொண்டு உயிரிழந்த போலீசாரின் வீரத்தை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநகர் மனோஜ் சின்கா, ஸ்ரீநகரில் காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்டார்.

    மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ''சிறந்த வியூகம் மூலம் உத்தர பிரதேச மாநில போலீஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்தி, குற்றத்தை முறியடித்துள்ளது. திருவிழாக்கள், முக்கியமான நிகழ்ச்சிகள், அரசியல் பேரணி உள்ளிட்ட பேரணிகள் அமைதியாக நடைபெற்றுள்ளன'' என்றார்.

    தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    ×