search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People protest against"

    • வத்தலக்குண்டுவில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.
    • ஒருதரப்பினரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததால் பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்குத்தெரு மற்றும் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதி மக்களிடையே தீபாவளி நாளில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருதரப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் பழைய வத்தலக்குண்டு பகுதிக்கு சென்று மேலும் 2 பேரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போவதாக தெரிவித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்வதாகவும், தாங்கள் விசாரணைக்கு யாரையும் அனுப்பமாட்டோம் என தெரிவித்தனர். ஆனால் போலீசார் தாங்கள் விசாரணை செய்துவிட்டு அனுப்பிவிடுவதாக கூறியும் பொதுமக்கள் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். யாரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குள்ளப்பகவுண்டன் பட்டியில் ரூ.24 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான கழிப்பறை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆண்களுக்கான கழிப்பறையை வேறு இடத்தில் கட்டுமாறு கூறி எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 6-வது வார்டு குள்ளப்பகவுண்டன் பட்டியில் ரூ.24 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான கழிப்பறை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கியது.

    இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதாலும் ஏற்கனவே பெண்கள் கழிப்பிடமும் இதே பகுதியில் இருப்பதாலும் இங்கு ஆண்களுக்கான கழிப்பறை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அந்த பணிகள் பாதியிலேயே நின்று போனது. இந்நிலையில் ஆண்களுக்கான கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என கூறி ஏராளமான ஆண்கள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆண்களுக்கான கழிப்பறையை வேறு இடத்தில் கட்டுமாறு கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் நகராட்சி ஆணையாளர் காஞ்சனாவிடம் மனு அளித்தனர்.

    இதனையடுத்து இருவரும் பேசி முடிவு செய்து கழிப்பறை வேண்டுமா? வேண்டாமா? என தீர்மானித்து பதில் அளிக்குமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×