என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Park Maintenance"
- பூங்கா மற்றும் திடல் பராமரிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 183 பூங்கா உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பூங்கா மற்றும் திடல் பராமரிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலையில் நடந்தது. மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 183 பூங்கா உள்ளது. இதில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பூங்கா உட்பட 18 பூங்காக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. பொது இடங்களில் உள்ள சில பூங்காக்கள், போக்குவரத்து ரவுண்டானா பூங்காக்களை சில தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர் பராமரித்து வருகின்றனர்.குடியிருப்பு பகுதிகள், கேட்டட் கம்யூனிட்டி பகுதிகளிலும் உள்ள பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள், குழந்தைகள் விளையாடும் வகையிலும், உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தி உடல் நலன் பேணும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவற்றில், நமக்கு நாமே திட்டத்தில் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் அமைக்கப்படும். ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்