search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Our Lady of Lourdes"

    புதுவை வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
    புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பாதிரியார்கள் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது. அதன் பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் சிறிய தேர்பவனி நிகழ்ச்சிகள் 9 நாட்கள் நடைபெற உள்ளன.

    அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் சனிக்கிழமை கோவை மாதாவின் மணிகள் நடத்தும் ஜெபமாலை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெபமாலைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

    5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.

    மாதா சொரூபத்துக்கு வைர கிரிடம் சூட்டப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறது. அப்போது ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை தேரில் தூவி வழிபடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மறுநாள் காலை 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் உதவி பங்குத்தந்தை, விழா குழுவினர், பங்கு பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் மற்றும் திருத்தல பக்தர்கள் செய்து வருகின்றனர். 
    வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
    வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை வில்லியனூரில் உள்ள தூய லூர்து மாதா திருத்தலம் (வில்லியனூர் மாதா) வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்சு நாட்டின் லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கு என்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் இந்த ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த சனிக்கிழமை ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்று காலை 5-30 மணிக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள அருள்நிலை ஆலயத்தில் உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. இதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும். அதன்பின் ஆயர் கொடியேற்றி திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, தேர்பவனி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் 9 நாட்களும் நடைபெறும். மே மாதம் 4-ந்தேதி ஜெபமாலை கண்காட்சியும், 5-ந்தேதி காலை 7-30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் இரவு 7-30 மணிக்கு ஆடம்பர திருவிழா தேர்பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6-30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.

    இவ்வாறு பிச்சை முத்து அடிகளார் கூறினார்.
    நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை நவநாள் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை, பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும். 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.

    வருகிற 4-ந் தேதி காலை 6 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். இதில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர் தொடர்ந்து பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாலமோன், பங்கு அருட்பணிப்பேரவை, இறை மக்கள் செய்துள்ளனர்.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித லூர்து அன்னை திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித லூர்து அன்னை திருவிழா நடந்தது. இதையொட்டி பங்குமக்கள் எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஜெபமாலை ஜெபித்து, பாடல்கள் பாடி பவனியாக வந்தனர்.

    இந்த பவனி மேல்நிலைப்பள்ளி சாலை, மெயின் ரோடு, பார்க் தெரு, கோவில் தெரு வழியாக நடந்தது. பின்னர் பாளையங்கோட்டை மறைமாவட்டம் கே.டி.சி. நகர் பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் திருப்பலி நடந்தது.

    இதில் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நற்கருணை பவனி நடந்தது.

    இந்தநிலையில், நேற்று தக்கலை மறை மாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அந்தோணி ஜோசப் முன்னிலை வகித்தார்.

    இதனை தொடர்ந்து அன்னையின் தேரானது பூக்களால், அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி நடந்தது. சந்தன மாதா கோவில் தெரு, சிங்காரவேல தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பாரதியார் மெயின்ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தையர் மார்சல் லிங்கன், பிரவின், சூசைஅடிமை, அஸ்வின் மற்றும் பலர் செய்துள்ளனர்.
    ×