என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்26 April 2019 4:19 AM GMT (Updated: 26 April 2019 4:19 AM GMT)
நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை நவநாள் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை, பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும். 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.
வருகிற 4-ந் தேதி காலை 6 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். இதில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர் தொடர்ந்து பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாலமோன், பங்கு அருட்பணிப்பேரவை, இறை மக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை, பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும். 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.
வருகிற 4-ந் தேதி காலை 6 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். இதில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர் தொடர்ந்து பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாலமோன், பங்கு அருட்பணிப்பேரவை, இறை மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X