என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NRI Seats"
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- 6 இடங்கள் வெளிமாநி லத்தை சேர்ந்தவர்களுக்கும், 4 இடங்கள் வெளிநாட்டினர் என்ற போர்வையிலும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி யில் மொத்தம் 22 வெளிநாடு வாழ் இந்தியர் மருத்துவ இடங்களில் 10 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரம்பியது. எஞ்சிய 12 இடங்கள் நிரம்பவில்லை.
இந்த இடங்களை சென்டாக் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு தாரை வார்த்துள்ளனர். 3-ம் கட்ட கலந்தாய்வில் காலியாக இருந்த 12 இடங்களில் 10 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் வெளிமாநி லத்தை சேர்ந்தவர்களுக்கும், 4 இடங்கள் வெளிநாட்டினர் என்ற போர்வையிலும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்கள் முழுமையாக நிரம்பாவிட்டால், எஞ்சிய இடங்கள் அரசு ஒதுக்கீடாக மாற்றம் செய்யப்படும்.
ஆனால் தற்போது சென்டாக் அதிகாரிகள் இந்த இடத்தை தங்கள் இஷ்டத்திற்கு பல லட்சம் ரூபாய் விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். இந்த ஒதுக்கீடை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அனைத்தையும், புதுவை மாணவர்கள் பலனடையும் வகையில் அரசு ஒதுக்கீடாக அறிவித்து கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்