search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushrooms"

    • போதை காளான் விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 2022 ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையி லான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடைக்கா னலை சேர்ந்த சந்தோஷ் (வயது32), ராஜபாண்டி (26), பெங்களூருவை சேர்ந்த அகஸ்டின் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போதைப் பொருள் விற்பனை தொடர்பாக வழக்குகள் இருந்தது. இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செங்கமல செல்வன் கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    கொடைக்கானலில் இதுபோன்று தொடர்ந்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கொடைக்கானல் போலீசார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் நகர் மற்றும் மேல்மலை கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலர் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • முத்துக்காளான், சிப்பிக்காளன், குடைக் காளான், கும்பக் காளான், குச்சி காளான் போன்று பல்வேறு ரக உணவு வகை காளான்கள் தற்போது மழை காரணமாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • பெரும்பாலும் புதர் மண்டிய பகுதிகளுக்குள் காளான்கள் விளைவதால் மலைப்பகுதிகளில் அதிகம் பழகிய நபர்கள், மற்றும் விவசாயிகள் இதனை தேடிப்பிடித்து பறித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. போடியை சுற்றிலும் மலைப்பகுதி அதிகம் என்பதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக இயற்கையாக விளையும் உணவுக்கு பயன்படுத்தப்படும் காளான்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.

    மழைக்காலத்தில் இடி, மின்னல் தோன்றும் பகுதிகளில் ஈரப்பதம் அதிகம் உள்ள நிலங்களில் இதுபோன்ற இயற்கை காளான்கள் வெடித்து கிளம்புவது இயல்பு.

    முத்துக்காளான், சிப்பிக்காளன், குடைக் காளான், கும்பக் காளான், குச்சி காளான் போன்று பல்வேறு ரக உணவு வகை காளான்கள் தற்போது மழை காரணமாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் புதர் மண்டிய பகுதிகளுக்குள் இது போன்ற காளான்கள் விளைவதால் மலைப்பகுதிகளில் அதிகம் பழகிய நபர்கள், மற்றும் விவசாயிகள் இதனை தேடிப்பிடித்து பறித்து வருகின்றனர்.

    இவ்வாறு பறித்து வரக்கூடிய காளான்கள் மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டு வருகிறது. சைவப் பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக காளான் உள்ளது.

    மேலும் அசைவ உணவை தவிர்ப்பவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதால் இயற்கை காளான்களுக்கு மதிப்பு அதிகம் உள்ளது.

    பெரும்பாலும் செயற்கை காளான்களை விட இயற்கை காளான்களில் புரதங்களும் ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது.

    இயற்கையாக உற்பத்தி ஆகின்ற மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாது வகைகளும், உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இவ்வகை காளான்கள் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய இயற்கை உணவாக உள்ளது. வருடம் முழுவதும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் காளான்கள் கிடைத்து வந்தாலும் மழைக்காலங்களில் மட்டுமே அதிகளவில் இயற்கையாக பூமியில் உற்பத்தியாகும் காளான்கள் கிடைப்பது அரிது.

    இதனால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்று உணவிற்காக பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நாளில் உற்பத்தியாகி அன்றே அழியக்கூடியது என்பதால் இயற்கை காளான்களை இருப்பு வைத்து விற்க முடியாது.

    ஒரு நாள் தாமதித்தாலும் அழுகி புழுக்கள் வைத்து உண்பதற்கு உபயோகமற்றதாக மாறிவிடும் என்பதால் பறித்து வரும் அன்றே இவைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காளான்களில்தான் ஊட்டச்சத்து அதிகம் உண்டு என்பதால் இவ்வகை காளான்கள் தற்போது போடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

    ×