search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை காளான்"

    • போதை காளான் விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 2022 ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையி லான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடைக்கா னலை சேர்ந்த சந்தோஷ் (வயது32), ராஜபாண்டி (26), பெங்களூருவை சேர்ந்த அகஸ்டின் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போதைப் பொருள் விற்பனை தொடர்பாக வழக்குகள் இருந்தது. இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செங்கமல செல்வன் கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    கொடைக்கானலில் இதுபோன்று தொடர்ந்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கொடைக்கானல் போலீசார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் நகர் மற்றும் மேல்மலை கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலர் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×