என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "michael hussey"
- ஷிவம் துபே மிகவும் திறமையான பேட்ஸ்மேன். அவர் பந்தை சிக்சருக்கு அடிக்கும் விதம் அபாரமானது.
- சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் அவர் ஆட வேண்டும் என்பதே அணியின் திட்டம்.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 55-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சி.எஸ்.கே. அணி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் டெல்லி அணி இருக்கிறது.
இன்றைய போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்ஹஸ்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை திருப்தி அளிக்கிறது. டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் கீழே இருக்கிறது. ஆனால் இரண்டு வெற்றிகளை பெற்றால் அவர்கள் மேலே வரும் சூழல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கிறது. டெல்லி கடைசியாக ஆடி உள்ள 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இருக்கிறது.
எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. டெல்லி அணிக்கு எதிராகவும் எப்போதும் போல் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சில பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதற்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.
ஷிவம் துபே மிகவும் திறமையான பேட்ஸ்மேன். அவர் பந்தை சிக்சருக்கு அடிக்கும் விதம் அபாரமானது. கடந்த சீசனில் அவரது பங்களிப்பு தெளிவில்லாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் டோனியும், பிளமிங்கும் அவருக்கென பிரத்யேகமான ஒரு பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் அவர் ஆட வேண்டும் என்பதே அணியின் திட்டம். ஷிவம் துபேயும் அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.
இதே போல கான்வே, ரகானே ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர்.
இவ்வாறு மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் கூறும்போது, 'ரிஷப் பண்ட் இல்லாதது அணிக்கு பாதிப்பே. மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக ஆடக்கூடிய வர். எங்களது அணி வீரர்கள் தங்களது சிறப்பான நிலையை வெளிப்படுத்துவார் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்