search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manakkula Vinayagar College"

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும் முதல்வருமான வெங்க டாசலபதி பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார்.
    • பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் உயிர் மருத்துவத்துறை பயோ மெடிக்கல் சொசைட்டி சார்பில் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ கருவிகள் பயிற்சிப் பட்டறை நடந்தது.

    இதனை அதீனா பாண்டியன் பயோ மெடிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடத்தியது.

    இதில் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தன சேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி. பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும் முதல்வருமான வெங்க டாசலபதி பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார்.

    உயிர் மருத்துவப் என்ஜினீயரிங் துறை தலைவர் விஜயலட்சுமி சிறப்புரை ஆற்றினார். பயிற்சியில் அதீனாபாண் டியன் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்று உயிர் மருத்துவப் பொறியியல் சார்ந்த பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகள் பற்றியும், அவற்றின் பயன்கள், பழுது நீக்குதல் பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர்.

    இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகாடமிக் டீன் அறிவழகர் நன்றி கூறினார்.

    • மாணவர் அத்தியாயத்திற்கான விருதினை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அத்தியாயம் பெற்றது.
    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் புதுச்சேரி மையம் நடத்திய 56-வது பொறியாளர் தின விழாவில் சிறந்த மாணவர் அத்தியாயத்திற்கான விருதினை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அத்தியாயம் பெற்றது.

    இவ்விருதினை இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ்- மாணவர் அத்தியாயம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கருவியல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் வரலட்சுமி பெற்றுக்கொண்டார்.

    தக்ஷஷீலா பல்கலைக்கழத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
    • மாரத்தான்போட்டியில் சுமார் 100 செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் செவிலியர் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் தேசிய எய்டஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எய்ட்ஸ் விழிப்பு ணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் முத்தமிழ் செல்வி, திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    போலீஸ் குழு ஆம்புலன்ஸ் குழு பங்கேற்றனர். டாக்டர் சபரி ராஜன், நர்சு ஜெயபிரதீப், செவிலியர் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பா ளர் சக்திபிரியா, உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார். மற்றும் பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாரத்தான்போட்டியில் சுமார் 100 செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செவிலியர் கல்லூரி வளாகம் வரை மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.

    முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியை சக்திபிரியா செய்திருந்தார்.

    • மேலாண்மை கணக்காளர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்
    • கல்லுாரி நிறுவனமும் முழு ஒத்துழைபபை அளிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் கல்லுாரியின் வணிகவியல் துறை மாணவர்கள், பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவர்கள் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய பட்டயக் கணக்காளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்

    பட்டயக் கணக்காளர் (சி.ஏ ) தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் முழு ஆற்றலை கொண்டு உழைப்பதுடன் அதற்கு கல்லுாரி நிறுவனமும் முழு ஒத்துழைபபை அளிக்க வேண்டும்.

    அதன்படி மணக்குள விநாயகா கல்விக் குழுமம், சென்னை ஹயக்கிரீவர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து வணிகவியல் துறை மாணவர்களை பட்டயக் கணக்காளர் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற செயதுள்ளது.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் நாராயணசாமி பொருளாளர் ராஜராஜன் கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாசலபதி கலை அறிவியல் கல்லுாரி டீன் முத்துலடசுமி பதிவாளர் அப்பாஸ் மொயதீன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்தனர். தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் டீன்கள் மாணவர்களை வாழ்த்தினர்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • புதுவையை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    அந்நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் அன்பரசன், சுரேஷ் மற்றும் சபரி நாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு குறித்து அனைத்து விபரங்களையும் விளக்கி கூறினர்.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எம்.ஐ.டி., மற்றும் புதுவையை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நிவேதா, ேஹமசந்திரன், சூர்யா ஆகியோர் புதுவை மண்டல அளவில் நடைபெற்ற சி.ஐ.ஐ. ஸ்டார்டப் சமீட் 2022-ன் இன்னோவேஷன் போட்டியில் கலந்து கொண்டு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை பெற்றனர்.
    • தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்பு மலர் மற்றும் அனைத்து துறை டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நிவேதா, ேஹமசந்திரன், சூர்யா ஆகியோர் புதுவை மண்டல அளவில் நடைபெற்ற சி.ஐ.ஐ. ஸ்டார்டப் சமீட் 2022-ன் இன்னோவேஷன் போட்டியில் கலந்து கொண்டு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலை வகித்தார். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, அகாடமிக் டீன் அறிவழகர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் ராஜா, பயோ மெடிக்கல் துறை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்பு மலர் மற்றும் அனைத்து துறை டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கில் நிரலாக்கத்தின் விளைவு அடிப்படையிலான கற்பித்தல், கட்டமைப்பு, எம்பெடட் பாடங்கள் மற்றும் ப்ளும்ஸ் டாக்ஸ்னாமி அடிப்படையில் வினா தாள்களை உருவாக்குதல் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி துறை பேராசிரியர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • கல்வி மற்றும் தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல்

    கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி, மணக்குள விநாயகர் கல்வி குழு மத்தில் செயல்படும் கல்லூரிகளின் சாதனைகள், பாடப்பிரிவுகள் குறித்து விளக்கி கூறினார். கல்வி மற்றும் தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமியின் டீன்கள் அன்பு மலர், அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×