search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "literacy program"

    • வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது
    • 9 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்படுகிறது

    வேலூர்:

    பள்ளிக்கல்வி துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 'சிறப்பு எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    குறிப்பாக முற்றிலும் எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. வேலூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் மற்றும் கடலூர் மாவட்ட சிறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் வரும் 17-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலகத்தில் நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி. பேரணாம்பட்டு ஆகிய வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

    • புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது.
    • புதிய பாரத எழுத்தறிவு திடடம் திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 83 மையங்களில் தொடங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - புதிய பாரத எழுத்தறிவு திடடம் திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 83 மையங்களில் தொடங்கப்பட்டது.

    திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நொய்யல் வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியின் குடியிருப்பு பகுதியில் துவக்கப்பட்டுள்ள மையத்தில் திருப்பூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தி வசந்தி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் கீதா ஆகியோர் உடனிருந்தனர். தன்னார்வலர் பௌஜியா பேகம் கற்போருக்கு பாடம் கற்பித்தார்.

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது. கற்றல் மையங்களை, பள்ளிகள், கற்போர் குடியிருப்பு பகுதி, நூறு நாள்வேலை திட்டம் நடைபெறும் இடம் மற்றும் கற்போர் பணிபுரியும் தொழிற்சாலை வளாகம் ஆகியவற்றில் கற்போருக்கு ஏதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கற்போருக்கு எழுத்துக்களை அடையாளம் காணுதல், சொற்களின் வரிவடிவத்தை அறிதல், பிறர் உதவியின்றி எழுதுதல் மற்றும் வாசித்தல், 1 முதல் 1000 வரை எண்களை எழுதுதல், கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்தல், கடிகாரத்தில் நேரமறிதல், பயணச்சீட்டு முன்பதிவு, பீம் செயலி போன்றவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல், சட்ட அறிவு, பணமில்லா பரிவர்த்தனை மற்றும் உடல்நலமும் சுகாதாரமும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ரூ.2½ லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது
    • நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்

    திருப்பத்தூர்:

    தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்ட மூலம் 15 வயது முதல் 40 வயது வரை அப்பகுதியில் படிக்காத பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் பாடம் கற்பிக்கும் திட்டமாகும்.

    இந்த திட்டம் திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் மற்றும் ரூ.2½ லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.சக்கரவர்த்தி, தலைமை தாங்கினார். அனைவரையும் ஆசிரியர் ஸ்ரீ ரஞ்சனி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி கவுன்சிலர் மு. வெற்றிகொண்டான் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களை வழங்கியும் தண்ணீரை திறந்து வைத்து பேசினார்.

    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் வயது வந்தோர் கல்வி இயக்கம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027-ம் ஆண்டு வரை நடைபெற உள்ளது.
    • இந்த திட்டம் சார்பான விழிப்புணர்வு பேரணி பரமத்தியில் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் வயது வந்தோர் கல்வி இயக்கம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027-ம் ஆண்டு வரை நடைபெற உள்ளது.

    இந்த திட்டம் சார்பான விழிப்புணர்வு பேரணி பரமத்தியில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி தொடங்கி வைத்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சுபா முன்னிலை வைத்தார்.

    பேரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடு களை ஆசிரியர் பயிற்று நர்கள் பார்வதி மற்றும் செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பயிற்றுநர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள்
    • எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவை வழங்கிட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.

    விராலிமலை :பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை கீரனூர் மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் செயல்படுத்துவதற்கான மைய கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி கீரனூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டு முதியோர்களுக்கான எழுத்தறிவையும் எண்ணறிவையும் வழங்கிட கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-2022 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 கற்றல் மையங்களில் 7949 கற்போர் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் வழங்கி மாநில எழுத்தறிவு விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்திடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027 என்ற புதிய திட்டம் 5 ஆண்டுகள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 13,680 கற்போர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியதவர்களுக்கு கையெழுத்து போடவும், மனு எழுதவும், கடிதம் எழுதவும், நாளிதழ்கள் படிக்கவும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். அதே போல் தன்னார்வலர்களிடம் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மெஹராஜ் பானு, காந்திமதி, வட்டார வளமைய மேறபார்வையாளர் அனிதா, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். பயிற்சியின் கருத்தாளர்களாக சுரேஷ், அப்சரா பானு, மாரியம்மாள் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் மஞ்சு,சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 4 ஆயிரம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கப்பட்டது.
    • எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது. ஆசிரியை ஆனந்தவல்லி வரவேற்றார்.

    புத்தகங்களை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி பேசியதாவது:-

    நடப்பு கல்வியா ண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும்.

    இதற்காக மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு படிக்கும் 1272 மாணவர்களுக்கும், 2-ம் வகுப்பு படிக்கும் 1509 மாணவர்களுக்கும், 3-ம் வகுப்பு படிக்கும் 1514 மாணவர்களுக்கும் என மொத்தம் 4295 மாணவ-மாணவிகளுக்கு இந்த கையேடு வழங்க ப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்றுக் கற்பதை பெற்றோர் அறியும்வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளின் தனித்திறன்கள் வகுப்பறையில் ஊக்குவிக்கப்படுவது குறித்து விளக்கிக் கூறுவதோடு குழந்தைகளின் திறன்களைப் பெற்றோர் காணும்வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    இந்த கருத்துக்களை முதன்மைப்படுத்தி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு) வகுப்பு வாரியாக பெற்றோர் கூட்டம் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆசிரியை ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    ×