என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kengaiyamman Sirasu Festival"
- பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்
- இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாடகமும் நடக்கிறது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும் இரவு பெருமாள் சாமி உற்சவம் நடைபெற்றது.
இன்று காலை அம்மன் சிரசு திருவிழா தொடங்கியது. கெங்கையம்மன் சிரசு பவனி வந்தது. கோவிலை அடைந்தது தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின் குடியாத்தம் நகரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாடகமும், நாளை காளியம்மன் திருவிழாவும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் தர்மகர்த்தா, ஊர் பெரிய தனகாரர்கள் உள்பட விழா குழுவினர் கிராம மக்கள் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்