search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayalpatnam"

    • மீலாடி நபி விழாவை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் பங்கேற்ற 25 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ஜூலானி பள்ளியில் மீலாடி நபி விழாவை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது.இதில் ஜம் ஜம் ஆயிஷா முதல் பரிசை பெற்றார்.2-வது பரிசை செய்யது ஹலீமா, 3-வது பரிசை அப்துல் பாசித் ஆகியோரும் பெற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்ற 25 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவிற்கு முகம்மது தலைமை தாங்கினார்.ஜெய்லானி பள்ளியின் தலைவர் ரஹமத்துல்லா மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெசிமுதீன் வரவேற்று பேசினார். மன்னர் பாதுல் அஸ்ஹப் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஹாஜி மலாங் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முகம்மது ஷமீம் குழுவினர் செய்திருந்தனர்.

    ×