search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi Collector"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் திருநாவலூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான பாதூர் கிராம எல்லையில் சேஷ நதியின் குறுக்கே 2 தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கரும்பு விவசாயிகள் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சுமையை ஏற்றிச் செல்ல ஏதுவாகவும், குறிப்பாக செங்குறிச்சி, மதியனூர், நைனாகுப்பம், வண்டிப்பாளையம், பாதூர், டி.ஒரத்தூர், சின்னக்குப்பம் ஆகிய கிராமங்களின் விவசாயப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிகளுடன் பச்சை நிறத்துண்டு அணிந்து 3 கி.மீ. தொலைவிற்கு வயல்வெளியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு தலைவரின் விவசாய நிலத்தில் சந்தனமரம், செம்மரம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உற்பத்திக்குழு மாவட்ட தலைவர் ஜோதிராமன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கள்ளக்குறிச்சியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா என கலெக்டர் இயக்கி ஆய்வு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா, அதில் முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளிட்டவை உள்ளதா என ஆய்வு செய்வதற்காக அனைத்து வாகனங்களையும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்திற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வரவழைத்தனர். 

    இதையடுத்து அந்த வாகனங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகனங்களில் அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, பேருந்தின் தரைத்தளம், புவியிடங்காட்டி, கண்காணிப்பு கேமரா, பிரேக், லைட், கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை சரியான முறையில் இருக்கிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி வாகனம் ஒன்றை அவரே இயக்கி சரிபார்த்தார்.

    இதில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 76 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு அவசர காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏற்படுத்தினர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×