search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayaraman"

    • மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாகக்குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார்.
    • முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

    மதுரை

    மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் ஆண்கள் கல்லூரியில் நிர்வாக குழு தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலை யில் நடந்தது .

    இதில் இரு அணிகளாக போட்டியிட்ட நிலையில் யாதவ மகாசபையினர் 1500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் மதுரை தொழி லதிபர் எஸ். ஜெயராமன் தலைமையிலான நிர்வாக குழு அமோக வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து யாதவர் ஆண்கள் கல்லூரி நிர்வாக குழு தலைவராக தொழிலதிபர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக சிவ ராமகிருஷ்ணன், செயலாளராக ஆர்.வி.என்.கண்ணன், இணை செயலா ளராக எஸ்.முத்து கிருஷ் ணன் என்ற கிட்டு, பொரு ளாளராக கிருஷ்ண வேல், மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் மணி செல்வன், பாலகிருஷ்ணன், செந்தில், பாண்டியன், கே. கண்ணன், எல். முத்து கிருஷ்ணன் ஆகியோரும் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

    புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாக குழுவினர் தலைவர் ஜெயராமன் தலைமையில் கல்லூரி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கல்லூரி அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.

    புதிய நிர்வாக குழுவை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஜெயராமன் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    தமிழர் தன்மான பேரவை சார்பில் முள்ளிவாய்க்கால் பேரழிவு 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது. களத்தில் இறங்கி போராட வேண்டும். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மூலம் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது. ஆனால் மத்திய அரசு , காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் 3 சுற்றுகளாக செயல்படுத்த போகிறார்கள். புதுச்சேரிக்குட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறிவிட்டார். ஆனால் தமிழக அரசு தனது நிலைப்பாடு பற்றி இதுவரை தெளிவாக கூறவில்லை. இந்த பிரச்சினையின் தீவிரத்தை அறியாமலேயே பலர் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    2016-க்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ்கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியானால் ஓட்டுமொத்த காவிரிபடுகையும் காணாமல் போய்விடும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை கேட்டு கொள்கிறோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

    ×