என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jain monk"
- பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் மத துறவிகொலை செய்யப்பட்டுள்ளார்.
- விசாரணையில், கடனைத் திருப்பிக் கேட்டதால் துறவி கொல்லப்பட்டது தெரிய வந்தது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள நந்த் பர்வத் மடம் எனும் சமண மடத்தில் ஆசார்யா கம்குமார நந்த் மகாராஜ் எனும் சமண துறவி தங்கியிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக மடத்தின் மேலாளர் பீமப்பா உகாரே போலீசாரிடம் புகாரளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயின் துறவி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரது சடலம் ராய்பாக் தாலுகாவின் கடக்பாவி கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் கடனை திருப்பிக் கேட்டதால் துறவி கொல்லப்பட்டது தெரிய வந்தது.
துறவியுடன் இருந்த சந்தேகத்திற்கு இடமான நபர் காவலில் எடுக்கப்பட்டு விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு உதவிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தைச் சேர்ந்தவர் வினித் ஷா. இவர் ஒரு அரசு ஊழியராவார். இவரது மகள் குஷி ஷா(12). குஷிக்கு 8 வயது முதலே, துறவியாக வேண்டும் என்கிற எண்ணம் இருந்து வந்துள்ளது.
மேலும் சிறந்த துறவியாக வலம் வருவாள். அவள் ஏற்கனவே ஒரு துறவியாக ஆயிரம் கிலோமீட்டர் பாதங்களால் நடந்து சென்று துறவிகளின் வாழ்க்கை சூழலை நன்கு உணர்ந்தவள். இன்று துறவியாகவே மாறிவிட்டாள்’ என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்