search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guruvayur Express Train"

    • சென்ட்ரலில் இருந்து நாளை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் மாற்றுப்பாதை வழியாக நாகர்கோவில் சென்றடையும்.
    • மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதை வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), 25-ந்தேதி மற்றும் 27-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20683) மாற்றுப்பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை), 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும்.

    மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (12689) மாற்றுப்பாதையாக சேலம், ஈரோடு, திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 25-ந்தேதி இரவு 7.35 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12690) மாற்றுப்பாதையாக திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை சென்டிரல் வந்தடையும். இதேபோல குருவாயூரில் இருந்து 27-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) மாற்றுப்பாதையாக திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.

    மேலும், மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12665) மாற்றுப்பாதையாக திருச்சி, கரூர், ஈரோடு, போடனூர், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
    • நாங்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மாற்றப்பட உள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரெயில்களின் நேரம் வருகிற 14-ந் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரெயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சோழன் விரைவு ரெயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு வந்தடையும்.

    இது தவிர சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் (16127) காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும்.

    நாங்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மாற்றப்பட உள்ளது.

    இந்த 2 ரெயில்களின் நேரம் மாற்றம் வருகிற ஆகஸ்டு 14-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×