search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gudiyatham gangai amman"

    கே.வி.குப்பத்தை அடுத்த முடினாம்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிரசு கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
    கே.வி.குப்பத்தை அடுத்த முடினாம்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மன் உடலில் பொருத்தி கண்திக்கப்பட்டது.

    அம்மன் அலங்காரம், பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல், கும்பசோறு படைத்தல், சுவாமி வீதிஉலா, வாணவேடிக்கை ஆகியவையும் நடைபெற்றன.
    குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
    குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்பித்த புராண கதையை நினைவுக் கூறும் விதமாக சிரசு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இன்று காலை 5 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை வந்தடைந்தது.

    சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்களும் வந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சி அளித்தது.

    பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு கொண்டு செல்லப்பட்ட போது ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

    பின்னர் கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த இருந்த சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப் பட்டது. சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது. சிரசு திருவிழாவில் ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், தாசில்தார் கோபி, நகராட்சி கமி‌ஷனர் செல்வ பாலாஜி, என்ஜினீயர் சங்கர், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெ.கே.என். பழனி உள்பட பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    நகரம் முழுவதும் பொது மக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள், பக்தர்கள், கல்வி நிறுவனங்களின் சார்பிலும் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர், மோர், கூழ், பானகம், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் குடியாத்தம் நகராட்சி சார்பிலும் குடிநீர், சுகாதாரம், முதலுதவி மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    கோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 8 மணிக்கு அம்மன் சிரசு சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

    அப்போது, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கும்.
    ×